நிர்மலா சீதாராமன்- ரூ.3.25-லட்சம் கோடி கூடுதல் நிதி
நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.3.25-லட்சம் கோடி செலவழிக்க அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளார். பணவீக்கத்தை உன்னிப்பாகக் கவனித்து தகுந்த முறையில் கையாள்வதாகவும், மந்தநிலையைத் தடுப்பாதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை இந்தியா இரட்டிப்பாக்குவதற்கு “எங்கே எல்லாம் மிக நெருக்கமாக” உள்ளது என்றும், தொற்றுநோய் இடையூறுகளை எப்படி அரசாங்கம் கையாள்வது என்றும், மந்தநிலையில் பல நாடுகளைப் போல நாடு நம் நழுவாமல் இருப்பது என்றும் கவனிப்பதாகவும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை மற்றும் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதத்தில் சீதாராமன், காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் பல கட்சிகளைத் தாக்கி சம அளவில் பதிலளித்தார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் “மொத்த தவறான செலவு கணக்கீடு” என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சிக்கு பதிலளித்த சீதாராமன் கூடுதல் செலவினங்களைக் கவனித்துக்கொள்வதற்கு 3.25-லட்சம் கோடி ரூபாய் மிதப்பு இருப்பதால் 2022-23 இல் நிதிப் பற்றாக்குறை இலக்கை மீறாது என்று நம்பிக்கை அளித்துள்ளார்.
இதற்கு முன்பு அரசாங்கத்தால் சரியாக கணிக்க முடியவில்லை என்றும் , சூழ்நிலைகள் அத்தகைய வழியில் வளர்ந்தன என்றும், எனவே அரசாங்கம் ஒரு திருத்தத்துடன் வருகிறோம், இந்த கூடுதல் ஆதரவு நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார். பணவீக்கம் உச்சத்தை அடைந்து பரந்த பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கூடுதல் செலவினங்களுக்கு அரசு எவ்வாறு நிதியளிக்க திட்டமிட்டுள்ளது என்று கேட்ட போது “கடன் அட்டவணையை செப்டம்பரில் மாற்றவில்லை, கடன்திட்டங்களை மாற்றவில்லை, அரசாங்கம் உருவாக்கும் வருவாய் போதுமானது என்பதை நாங்கள் பார்க்கப் போகிறோம்“ என்றார்.
மேலும் அவர் இந்தியா மந்தநிலைக்கு வரவில்லை. இது கோவிட் சமயத்தில் நிவாரணம் அளித்தது என்றும்.அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் திட்டம், அரசாங்கத்தின் சாதகமான கொள்கைகள் காரணமாக தனியார் துறை முதலீடுகள் நடைபெறுவதாக அவர் வாதிட்டார்.
வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஈபிஎஃப்ஓ பதிவுகளைப் பார்க்கும்போது, செப்டம்பரில் 46 சதவீதம் அதிகமாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியாகும் என்று கூறினார்
சர்வதேச சந்தையில் எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக வரும் பணவீக்கத்தை நன்றாகக் கண்காணித்து வருவதாக கூறினார்.






