Ashok Selvan Marriage : நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்தார் நடிகர் அசோக் செல்வன்
Ashok Selvan Marriage : நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
மணமக்கள் :
- நடிகர் அசோக் செல்வன் ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் பிரபலமானார், அதைத் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, மன்மத லீலை போன்ற படங்கள் இவருக்கு பெரும் பாராட்டை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படத்தில் நடிகர் சரத் குமாருடன் இணைந்து நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
- கீர்த்தி பாண்டியன் 2019-ம் ஆண்டு வெளியான ‘தும்பா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலையாளத்தில் வெளியான ‘ஹெலன்’ படத்தின் ரீமேக்கான ‘அன்பிர்கினியாள்’ படத்தின் மூலம் பிரபலமானார், தற்போது அசோக் செல்வனுக்கு ஜோடியாக ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சாந்தனு பாக்யராஜ், பிருத்வி பாண்டியராஜன், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
Ashok Selvan Marriage - கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்த அசோக் பாண்டியன் :
நடிகர் அசோக் செல்வனுக்கும், நடிகர் அருண்பாண்டியனின் இளைய மகள் கீர்த்தி பாண்டியனுக்கும் இன்று திருநெல்வேலியில் பிரம்மாண்டமாக திருமணம் (Ashok Selvan Marriage) நடைபெற்றது. இந்நிலையில் இவர்களது திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அசோக் செல்வனும், கீர்த்தி பாண்டியனும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, இவர்களின் அறிமுகம் காதலாக மலர்ந்தது. அதன்பின்னர் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும், சமீபத்தில் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் அசோக் செல்வன் தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு, “செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் அசோக் செல்வனுக்கும் நடிகை கீர்த்தி பாண்டியனுக்கும் திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் திருமணம் (Ashok Selvan Marriage) நடந்து முடிந்துள்ளது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை திருமணம் நடைபெற்ற நிலையில், காலை 8 மணி முதல் பெரிய விருந்து நடக்கிறது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் தங்கள் திரையுலக நண்பர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். நடிகையும், நடிகர் அருண்பாண்டியனின் உறவினரான ரம்யா பாண்டியன் திருமண விழாவில் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
TNPSC Group 2 & 2A Exam Postponed : டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி.. தமிழகம் முழுவதும் தேர்வுகள் தள்ளிவைப்பு.!
-
India Beat USA T20 WC : டி20 உலககோப்பை.. அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றிகரமான தொடக்கம்..!
-
With Love Review : பழைய காதலைத் தேடும் பயணமா? 'வித் லவ்' திரை விமர்சனம்.!
-
India U19 Champions 2026 : யு19 உலகக்கோப்பை.. இங்கிலாந்தை வீழ்த்தி 6வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
India T20 World Cup Fixtures : டி20 உலகக் கோப்பை.. இந்திய அணி ஆடும் போட்டிகளின் முழு அட்டவணை விவரம்?
-
WPL 2026 Final : மகளிர் ஐபிஎல்.. டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பை வென்றது ஆர்சிபி..!
-
Murugappa Group : 125 ஆண்டுகள் வரலாறு கொண்ட "முருகப்பா குழுமத்தின்" வெற்றிப் பயணம்.!
-
Postal Department Jobs 2026 : அஞ்சல் துறையில் 28,740 பணியிடங்கள்.. 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்! உடனே விண்ணப்பிங்க.!
-
India U19 WC Final : U19 உலகக்கோப்பை.. ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி FINAL சென்றது இந்தியா.!
-
Hair Thin Fiber Chip : மனித முடியை விட மெல்லிய 'கணினி சிப்'.. சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.!