Gistak Media

Asia Cup Final 2025 : ஆசிய கோப்பை இறுதிப் போட்டி.. இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை.!

41 ஆண்டுகால ஆசியக் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக இறுதிப் போட்டியில் இன்று (Asia Cup Final 2025) மோத உள்ளன. 8 அணிகள் பங்கேற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இதில், இலங்கையும் வங்கதேசமும் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி

ஆசிய கோப்பை வரலாற்​றில் தற்​போது​தான் முதன்​முறை​யாக இந்தியாவுடன் பாகிஸ்​தான் அணி இறு​திப் போட்​டி​யில் விளை​யாடு​கிறது. அந்த அணி இந்தியாவுடனான லீக் சுற்​றில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், சூப்​பர் 4 சுற்​றில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் இந்​திய அணி​யிடம் தோல்வியை தழுவியது. மேலும் இரு அணிகளுக்கு இடையே லீக் சுற்றுப் போட்டிகளில் சண்டை சச்சரவுகள் நீடித்து வரும் நிலையில், இன்றைய ஆட்டம் ரசிகர்களிளுக்கு மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதேசமயத்தில் 41 ஆண்டுகால ஆசியக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.

இந்​திய அணி​யின் பேட்​டிங் வரிசையை பொறுத்த வரையில் அபிஷேக் சர்மா,ஷுப்​மன் கில், ஷிவம் துபே, சூர்​யகு​மார், திலக் வர்​மா, சஞ்சு சாம்​சன், ஆல்​ர​வுண்​டர்​ அக்​சர் படேல், ஹர்திக் பாண்டியா என பெரிய பட்டாளமே உள்ளது. பந்து வீச்சில் ஜஸ்​பிரீத் பும்ரா, குல்​தீப் யாதவ், வருண் சக்​ர​வர்த்​தி, அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

இந்தியா 8 முறை சாம்பியன்(Asia Cup Final 2025)

Asia Cup Final 2025 - Gistakmedia

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் இந்திய அணி 1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023 என 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டியிலும், ஒரு முறை டி20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா சாம்பியன் பட்டம் சூடி உள்ளது. மேலும் பாகிஸ்தான் (Asia Cup Final 2025) அணி ஆசிய கோப்பை தொடரில் 2000 மற்றும் 2012-ம் ஆண்டு என 2 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேசமயத்தில் டி20 வடிவில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

களத்தில் தடுக்க மாட்டேன்

ஆசிய கோப்பை இறுதிப் போட்டி குறித்து ​பாகிஸ்​தான் அணி​யின் கேப்​டன் சல்​மான் அலி ஆகா கூறும்​போது, ‘மைதானத்தில் ஒவ்​வொரு​வருக்​கும் உணர்ச்​சிகளை வெளிப்​படுத்த உரிமை உண்​டு, ஒரு வேகப்​பந்து வீச்​சாளர் உணர்ச்​சிகளைக் காட்​டு​வதைத் தடுத்​தால், பிறகு என்ன மிஞ்​சும்? அது அவமரி​யாதை​யாக இல்​லாத வரை நான் யாரை​யும் தடுக்க மாட்​டேன் என தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top