Gistak Media – Cinema News | Trending News | Latest News

Budget 2024 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கிடைக்கும் பெருமை

இந்திய நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 6வது முறையாக பட்ஜெட்டை (Budget 2024) தாக்கல் செய்யும் நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறவுள்ளார்.

Budget 2024 - இடைக்கால பட்ஜெட் :

இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், அடுத்த மாதம் வெளியாக இருப்பது கொள்கை அறிவிப்புகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டாகத்தான் (Budget 2024) இருக்கும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு விரிவான பட்ஜெட்டை தாக்கல் செய்யும். பொதுவாக இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டிற்கான அரசின் தற்போதைய செலவு, வருவாய், நிதிப் பற்றாக்குறை, நிதி செயல்திறன் மற்றும் அதிநவீன திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் :

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவரது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது இடைக்கால பட்ஜெட் இதுவாகும். மத்திய நிதியமைச்சர் (நிர்மலா சீதாராமன்) பிப்ரவரி 1ம் தேதி இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் (Budget 2024) செய்ய உள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த இரண்டாவது மத்திய நிதியமைச்சர் என்ற பெருமையை (நிர்மலா சீதாராமன்) பெற உள்ளார். 2019ஆம் ஆண்டு நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், ஏற்கனவே 5 முழு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ள நிலையில், ஆறாவது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதன் மூலம் 5 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த அருண் ஜெட்லி, யஷ்வந்த் சின்ஹா, மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோரின் சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடித்துள்ளார்.

நாட்டின் இரண்டாவது நிதியமைச்சர் :

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், நாட்டில் தொடர்ந்து 6 பட்ஜெட்களை தாக்கல் செய்யும் இரண்டாவது நிதி அமைச்சர் என்ற பெருமையை (நிர்மலா சீதாராமன்) பெறவுள்ளார். முன்னதாக, இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக ஆறு நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்த ஒரே நபர் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் ஆவார். அதாவது 1959 முதல் 1964 வரை 5 முழு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தவிர 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்து, நாட்டிலேயே அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2014-ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு, நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற அருண் ஜெட்லி, 2014-15 முதல் 2018-19 வரை தொடர்ந்து 5 பட்ஜெட்களைத் தாக்கல் செய்தார். அவரது உடல்நலக்குறைவு காரணமாக, பியூஷ் கோயஸ் அமைச்சராகப் பொறுப்பேற்று, 2019-20ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். 2019 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மோடி 2.0 அரசாங்கத்தில், நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது. 1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு, பட்ஜெட்டைத் தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top