Cabinet Approves Indias Bid CWG : 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை (Cabinet Approves Indias Bid CWG) குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம்
புதுடெல்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வரும் 2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும் ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் அதிகாரிகள் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் மாநில அரசுக்கு மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் (Cabinet Approves Indias Bid CWG)
இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். மேலும் இந்த விளையாட்டு போட்டிகளின் போது விளையாட்டு வீரர்களுடன் ஏராளமான பயிற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள், இதன் மூலம் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
சுற்றுலாவை மேம்படுத்தும்
அதிநவீன பயிற்சி வசதிகளுடன் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மைதானமாக அகமதாபாத் நகரம் உள்ளது. மேலும் நரேந்திர மோடி மைதானத்தில் ஐசிசி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் அதன் சிறப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்தலாம். இதுத்தவிர தகவல் ஒலிபரப்பு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்ற துறைகளிலும் செயல்பாடுகள் அதிகரித்து அதன் மூலம் பலர் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள். மேலும் உலக அளவில் மதிப்புமிக்க இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவது தேச ஒற்றுமை தொடர்பாக வலுவான உணர்வை வளர்க்கும் எனவும், புதிய தலைமுறை விளையாட்டு வீரர்கள் விளையாட்டை தொழில்முறைத் தேர்வாகத் தேர்ந்தெடுக்கவும், விளையாட்டுகளில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!
-
SA vs NZ t20 : ஆலன் அதிரடி சதம்.. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து.!
-
India vs England T20 : டி20 உலகக் கோப்பை அரை இறுதியில் இந்தியா - இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை.!
-
Artemis II : 50 ஆண்டுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு பயணம்.. நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் தயார்!
-
Central Bank of India Recruitment : சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 275 அதிகாரி பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
SA vs NZ Semi Final : டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை!
-
IND vs AFG Schedule : இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு.!
-
KITE-QTrack App : வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்.. புதிய ஆப் அறிமுகப்படுத்திய கேரள அரசு.!