Gistak Media

Cancer-Curing Nanoparticles: கோவை பேராசிரியர்கள் சாதனை|புற்றுநோயை குணப்படுத்தும் நானோ துகள்...

Cancer-Curing Nanoparticles :

தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை (Cancer-Curing Nanoparticles) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியைராக உள்ள கே.எம்.சாரதா தேவி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக உள்ள க.குருசரவணன் இருவரும் இணைந்து பணியாற்றி  புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த சாற்றில் உள்ள நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை எளிதில் கண்டறிந்து அழிக்கும். 

வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் தனித்துவம் கொண்டது :

இதுகுறித்து பேராசிரியர்கள் குருசரவணன்  மற்றும் சாரதாதேவி ஆகிய  இருவரும் செய்தியாளர்களிடம் பேசும் போது, தற்போது புற்றுநோயை குணப்படுத்த  பயன்படுத்தப்பட்டு வரும் மருந்துகள் யாவும் புற்றுநோய் பாதித்த செல்களை மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் சேர்த்து அழிக்கின்றன. ஆனால்  பேராசிரியர்கள் குருசரவணன் மற்றும் சாரதாதேவி கண்டுபிடித்த நானோ துகள்கள் புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் தன்மை கொண்டது.

சோதனையின் முதற்கட்டமாக இந்த நானோ துகள்களை எலிக்கு செலுத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். இந்த நானோ துகள்களை மனிதர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு அரிய கண்டுபிடிப்பு ஆகும்.  இந்த அரிய வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பை பாராட்டி  மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து பலரும் பேராசிரியர்கள் குருசரவணன் மற்றும் சாரதாதேவி ஆகிய இருவரையும் பாராட்டி வருகிறார்கள்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top