-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
Caste Violence In Schools And Colleges : பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்முறை இருக்காது - அரசு அதிரடி முடிவு
அரசு பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பெயர்களில் இருந்து சாதி அடிப்படையிலான பெயர்களை நீக்க வேண்டும் (Caste Violence In Schools And Colleges) என்று நீதிபதி சந்துரு ஆணையம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் சாதிய வன்முறையைத் தடுக்க நீதிபதி சந்துரு தலைமையிலான ஒருநபர் ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
பள்ளிகளில் சாதிச் அடையாளங்களை காட்டுவதற்காக மாணவர்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், காவி நிற கயிறுகளை அணிந்து செல்வதாகப் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக நெல்லை, மதுரை, ராமநாதபுரம், தேனி போன்ற தென் மாவட்டங்களில் இதுபோன்ற சாதி தகராறுகள் அதிகமாக நடப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து சாதி கயிறு தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை வழங்கப்பட்டது. அதில், “பள்ளி மாணவ, மாணவியர், தங்கள் சாதியை குறிக்கும் வகையில், பல்வேறு வண்ணங்களில் கயிறுகளை கைகளில் அணிந்து செல்வது தெரியவந்துள்ளது. இதனால், மாணவர்கள் பல்வேறு ஜாதி குழுக்களாக பிரிந்து, மதிய உணவு இடைவேளை, விளையாட்டு நேரம், பள்ளி நேரம் என கலக்காமல் குழுக்களாக இயங்கி வருகின்றனர்”.
எனவே, மாணவர்களின் நலன் கருதி, இவ்விஷயத்தில் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். காலை பிரார்த்தனை கூட்டத்தின் போது இதுபோன்ற சாதி அடிப்படையிலான பிரிவினையின் தீய விளைவுகளை முன்னிலைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். சாதி பிரிவினையை தூண்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர்களை எச்சரிக்கவும் (Caste Violence In Schools And Colleges) அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாதியின் அடையாளமாக மாணவர்கள் வண்ணக் கயிறுகளை அணிவதைத் தடுக்குமாறு அனைத்து வகையான பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Caste Violence In Schools And Colleges - நீதிபதி சந்துரு குழு பரிந்துரைகள் :
இதை மேலும் பரிசீலித்த அரசு, சாதி பாகுபாட்டை தவிர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. இதனிடையே இந்த ஆணையம் தனது அறிக்கையை செயல்தலைவர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. நீதிபதி சந்துரு அந்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இயக்குநர் அறிவொளி மற்றும் உயர் அதிகாரிகளுடன் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் அளித்தார். அப்போது, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் உடனிருந்தார். இந்த அறிக்கையில், சாதி வன்கொடுமைகளை ஒழிக்க உடனடி மற்றும் நீண்டகால செயல்திட்டங்கள் என இரண்டு வகையான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
- அரசு பள்ளிகளில் உள்ள சாதி அடையாளங்களை உடனடியாக நீக்க வேண்டும்.
- மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளின் பெயரில் சாதி ரீதியான பெயர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.
- பள்ளிகளுக்கு நன்கொடை வழங்குபவரின் பெயரை சாதிப் பெயரோடு சேர்த்துப் பதிவு செய்யக் கூடாது.
- பள்ளியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரை கல்வி அதிகாரியாக நியமிக்கக் கூடாது. இவை உள்ளிட்ட பரிந்துரைகள் முதலமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.
Latest Slideshows
-
Indian Bank SO Recruitment 2026 : இந்தியன் வங்கியில் 350 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ?
-
Tamil New Year 2026 : புதிய நம்பிக்கையுடன் மலரும் 'தமிழ்ப் புத்தாண்டு' சிறப்புகள் & வழிபாட்டு முறைகள்!
-
Sabja Seeds Benefits in Tamil : கோடைக்காலத்தில் குளிர்ச்சி தரும் 'சப்ஜா விதைகள்'.. இவ்வளவு நன்மைகள் இருக்கா.?
-
CSK vs DC IPL 2026 Highlights : சஞ்சு சாம்சன் மிரட்டல் சதம்.. டெல்லியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றி
-
Jananayagan Movie Leaked Online : இணையத்தில் கசிந்த ‘ஜனநாயகன்’.. விஜய், படக்குழுவினர் அதிர்ச்சி?
-
LIK Movie Review : எப்படி இருக்கிறது LIK.. நான்காவது முறையாக ஹிட் அடித்தாரா பிரதீப்?
-
CRPF Recruitment 2026 : மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்..
-
IPL 2026 KKR vs LSG : கடைசி பந்தில் லக்னோ ‘த்ரில்’ வெற்றி..
-
Chennai Property Hotspots 2026 : சென்னையில் எங்கு முதலீடு செய்யலாம்? -
DC vs GT IPL 2026 Highlights : கடைசி பந்து வரை திரில்லர்..