வானத்தில் உள்ள நட்சத்திரங்களை ரசிக்கும் வகையில் கொல்லிமலையில் தமிழகத்தின் முதல் ‘டார்க் ஸ்கை பார்க்’ (Dark Sky Park) அமைக்கப்பட்டுள்ளது. கொல்லிமலையின் அரியூர் சோலை பகுதியில் இந்த டார்க் ஸ்கை பார்க் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 370 கி.மீ தொலைவில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பார்க்கை பிப்ரவரி 27, 2026 அன்று வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
இரவின் வானத்தை இயற்கை இருளோடு காணும் மாபெரும் வாய்ப்பு
- தமிழகத்தின் கொல்லிமலையில் உள்ள சோலா ரிசர்வ் காட்டில் திறக்கப்பட்டுள்ள இந்த டார்க் ஸ்கை பார்க் என்பது மாநிலத்தின் முதல் அதிகாரப்பூர்வ இரவு வான் காப்பகம் ஆகும்.
- இந்த டார்க் ஸ்கை பார்க் திறக்கப்பட்டிருப்பது அஸ்ட்ரோ டூரிசத்தை (Astro‑tourism) ஊக்குவிக்கும் ஒரு புதிய முயற்சி ஆகும்.
- மேலும் இது அறிவியல், சுற்றுலா, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய மூன்று துறைகளுக்கும் ஒரு முக்கியத்துவம் தரும் ஒரு தளமாக அமையும்.
- இந்த பூங்கா ஆனது வெறும் கண்களாலும், மற்றும் தொலைநோக்கிகளை கொண்டும் சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் பல்வேறு கோள்களை கண்டு ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இங்கே மூன்று நவீன தொலைநோக்கிகள் விண்மீன்களை உற்று நோக்குவதற்காக நிறுவப்பட்டுள்ளன.
பூங்காவிற்குத் தேவைப்படும் மின்சாரம் முழுவதும் சூரிய ஒளியிலிருந்து பெறும் வகையில் இந்த டார்க் ஸ்கை பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
டார்க் ஸ்கை பார்க் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் (Dark Sky Park)
தமிழகத்தின் முதல் டார்க் ஸ்கை பார்க் பின்வரும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்,
- இரவு சுற்றுலாவை ஊக்குவிக்கும்
- உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
- ஹோம்ஸ்டே, மற்றும் வழிகாட்டி சேவைகளின் வாய்ப்புகளை உருவாக்கும்
- வானியல் சுற்றுலாவை (Astro Tourism) ஊக்குவிக்கும். மேலும் பல புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும்.
வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து
வானியல் ஆராய்ச்சியாளர்கள் கொல்லிமலையில் இயற்கை இருள் நிலைபேறாக இருப்பதாகவும் இதனால் Milky Way-யை தெளிவாகக் காண முடிவதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பூங்காவின் கட்டுமான ஒளி மாசு குறைவு, மற்றும் உயர்ந்த (Dark Sky Park) காட்சித்தன்மை ஆகியவை மிகவும் சிறப்பாக உள்ளதாக கூறுகின்றனர்.
சமூக ஆர்வலர்களின் பிரதிபலிப்பு
அறிவியல் ஆர்வலர்கள், உள்ளூர் இளைஞர்கள், மற்றும் சுற்றுலா துறையினர் அனைவரும் வான்வெளி கண்காணிப்பிற்கு மிகவும் உகந்த இடமாக கொல்லிமலையின் அரியூர் சோலை பகுதியை தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். இயற்கை வளம், சித்தர் மரபு, மூலிகை வளம் என்று பல அடையாளங்களைக் (Dark Sky Park) கொண்டுள்ள தமிழகத்தின் கொல்லிமலை, இப்போது வானியல் சுற்றுலா வரைபடத்தில் இடம்பிடித்துள்ளதை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
டார்க் ஸ்கை பார்க் சிறந்த முன்னேற்ற முயற்சி
சுற்றுச்சூழல் மற்றும் வானியல் துறைகளில் முக்கிய முன்னேற்றமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. இது ஒரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அறிவியல் விழிப்புணர்வை இணைக்கும் சிறந்த முயற்சி ஆகும்.