-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
First Hindu Women AC Of Balochistan : பலுசிஸ்தானின் முதல் இந்து பெண் உதவி ஆணையராக காஷிஷ் சவுத்ரி பதவியேற்பு
பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 9 மில்லியனை நெருங்கி உள்ளனர். இதில் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர். மீதியுள்ள இந்துக்கள் பலுசிஸ்தான் உட்பட பிற மாகாணங்களில் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் முழுவதும், குறிப்பாக சிந்து மற்றும் இப்போது பலுசிஸ்தானில், அதிகமான இந்து பெண்கள் பொது சேவையில் நுழைகிறார்கள்.
சிந்து மாகாணத்தில் உள்ள இளம் பெண்கள் மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் போன்ற பல துறைகளில் உள்ளனர். பல கலாச்சார, மத மற்றும் சமூக தடைகளைத் தாண்டி இந்து சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று வருகின்றனர். பல துறைகளில் முக்கியமான பதவிகளைப் பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் குறிப்பிடத்தக்க (First Hindu Women AC Of Balochistan) வெற்றியைப் பெற்ற இந்து சமூகத்திலிருந்து வந்த புதியவர் இந்த காஷிஷ் சவுத்ரி ஆவார்.
காஷிஷ் சவுத்ரியின் பயணம் (First Hindu Women AC Of Balochistan)
இந்து சமூகத்தை சேர்ந்த காஷிஷ் சவுத்ரி பலுசிஸ்தானின் முதல் பெண் உதவி ஆணையராக பதவியேற்றார். காஷிஷ் சவுத்ரி பாகிஸ்தானின் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் ஒன்றான குறிப்பிடத்தக்க வெற்றியைப் (First Hindu Women AC Of Balochistan) பெற்றுள்ளார். உதவி ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சாகாய் மாவட்டத்தில் உள்ள தொலைதூர நகரமான நோஷ்கி பலுசிஸ்தானில் மிகவும் வளர்ச்சியடையாத பகுதிகளில் ஒன்றாகும். காஷிஷ் சவுத்ரி பலுசிஸ்தான் பொது சேவை ஆணையம் (BPSC) நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது இந்த வெற்றி பல இளம் பெண்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு ஒரு உத்வேகம் அளித்து வருகிறது என்று பயனர்கள் கூறி வருகின்றனர்.
கராச்சியில் ஜூலை 2022-ல் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்து பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற மனேஷ் ரோபெட்டா இன்றும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்து பொது சேவை தேர்வில் தேர்ச்சி பெற்ற புஷ்ப குமாரி கோஹ்லி கராச்சி காவல்துறையில் துணை ஆய்வாளராக பணிபுரிகிறார். 2019-ம் ஆண்டு சிந்து மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான ஷாஹத்கோட்டில் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட சுமன் பவன் போதானி ஹைதராபாத்தில் சிவில் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
வயது குறைந்த மற்றும் இளம் இந்துப் பெண்கள் முஸ்லிம் ஆண்களால் கடத்தப்பட்டு மதம் மாற்றப்படும் (First Hindu Women AC Of Balochistan) பிரச்சனைக்கு சிந்து மாகாணம் பெயர் பெற்றது ஆகும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள சிந்து மாகாணத்திற்கு இந்து சமூகத்திற்கு கல்விதான் முன்னோக்கிச் செல்லும் மிகவும் பயனுள்ள வழி என்று அவர் நம்புகிறார்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!