Gistak Media

Growth Of Technology Park In Chennai : சென்னையில் ஆண்டுதோறும் காணும் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி

சென்னையில் ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியானது சிறப்பாக நடந்து (Growth Of Technology Park In Chennai) கொண்டிருக்கிறது. அந்த வகையில், புது தகவல் ஒன்று ஆனது வெளியாகி உள்ளது. அதாவது பட்டாபிராம், மண்ணிவாக்கம் மற்றும் மலையம்பாக்கம் ஆகிய 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்ற தகவல் ஆனது வெளியாகி உள்ளது. சென்னை நகரமே ஆச்சரியப்படத்தக்க வகையில் கடந்த 20 வருடங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக IT கம்பெனிகளின் எண்ணிக்கை ஆனது சென்னை மட்டுமல்லாமல், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பெருகி வருகிறது. இதன் காரணமாக சென்னை நகரத்திற்குள் அதிக வாகன நெரிசல் ஆனது ஏற்படுகின்றது. அதனால் இதனை சரிகட்டும் விதத்தில் தான் முதன் முதலில் OMR சாலை ஆனது உருவாக்கப்பட்டது. இது ஒரு நல்ல மாற்றத்தை தந்தது. OMR சாலை உருவாக்கப்பட்டதால் பல இடங்களில், வாகன நெரிசல் ஆனது குறைந்து பொது மக்கள் தகுந்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வர வசதியாக இருந்து வருகிறது.

Growth Of Technology Park In Chennai - புறநகர் பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி :

முதன்முதலில் கடந்த 2000-ம் ஆண்டில் Tidel Park உருவாக்கப்பட்டது. சென்னையின் OMR சாலையில் 12,80,000 சதுரடியில் அமையப் பெற்றுள்ள Tidel Park ஆனது இன்று வரை சென்னையின் மிக முக்கிய அடையாளமாக கருதப்படுகிறது. சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 13 அடுக்குகளுடன் அமையப் பெற்றுள்ள Tidel Park ஆனது இந்தியாவில் உள்ள ஒரு சிங்கிள் பெரிய தொழில்நுட்ப பூங்கா ஆகும்.

Tidel Park ஆனது துவங்கப்பட்ட ஆண்டிலிருந்தே தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சியானது சென்னையை கலக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி ஆனது நாளுக்கு நாள் உயர்ந்தபடியே வருகிறது. OMR ரோடு, ரேடியல் ரோடு, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி போன்ற இடங்களில் ஏகப்பட்ட IT  நிறுவனங்கள் அமையப் பெற்றுள்ளன.

சென்னையில் 3 புதிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன :

சென்னையில் பட்டாபிராம், மண்ணிவாக்கம் மற்றும் மலையம்பாக்கம் ஆகிய 3 புதிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் ஆனது உருவாக்கப்பட்டு (Growth Of Technology Park In Chennai) வருகின்றன என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் சென்னையில்,

  • ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 5.33 ஏக்கர் நிலத்திலும்,
  • மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவு நிலத்திலும்,
  • வண்டலூர் மலையம்பாக்கத்தில் 0.5 ஏக்கர் நிலத்திலும்,

புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு ஆனது திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றை சரிப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் ஒன்றரை வருடத்துக்குள் இவை அனைத்தையும் கட்டி முடிக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மனித வளம் மற்றும் சிறந்த தொழில்நுட்ப கல்லூரிகள் போன்றவையெல்லாம், இந்த தொழில்நுட்ப பூங்காக்களின் அதிவேக வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. எனவேதான், பல முன்னணி நிறுவனங்கள் ஆனது சென்னையில் தங்களது வளர்ச்சி மையத்தை அமைக்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்த தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு ஆனது கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் ஆனது இன்னும் அதிக வளர்ச்சி அடைய இந்த தொழில்நுட்ப பூங்காக்கள் உதவியாக இருக்கும் என்றும் அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top