Gistak Media – Cinema News | Trending News | Latest News

Hosur Investments : ஓங்கி உயரும் ஓசூர் | குவியும் முதலீடுகள்

  • இந்த வருட தமிழ்நாட்டின் பட்ஜெட்டில் சென்னைக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள மற்றைய மாவட்டங்களுக்குமான முக்கியமான பல அறிவிப்புகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளன.
  • முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள மற்றைய மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளன. முக்கியமாக ஓசூரில் குவிந்து வருகின்ற முதலீடுகள் (Hosur Investments) தொடர்பான அறிவிப்புகள் ஆனது வெளியிடப்பட்டுள்ளன.

Hosur Investments - ஓசூரில் குவிந்து வருகின்ற முதலீடுகள் குறித்த விவரங்கள் :

Hosur Investments : தமிழ்நாட்டில் தற்போது மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி ஆனது அதிகரித்து உள்ளது. ஓசூரில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்திக்காக கோடிக்கணக்கில் முதலீடுகள் ஆனது செய்யப்பட்டு வருகின்றது.

ஓலா நிறுவன ஒப்பந்தம் :

Hosur Investments : ஓலா நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும், இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் ஆனது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஓலா நிறுவனம் ஆனது தமிழ்நாட்டில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் ஆனது முடிவு செய்துள்ளது. இந்த 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலை ஆனது உலகிலேயே சிப்களை உற்பத்தி செய்யும் பெரிய ஆலையாக இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் ஆனது தெரிவித்து உள்ளது. இந்த ஓலா நிறுவன அறிவிப்பை கண்டு சீனா ஆனது மிரண்டு போய் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் இந்த ஆலைகள் ஆனது அமைக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதனால் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு ஆனது தெரிவித்து உள்ளது.

ஓலா நிறுவன பைக் உற்பத்தி ஒப்பந்தம் :

Hosur Investments : இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றும் உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்து ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் ஆனது கிருஷ்ணகிரி ஓலா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் ஆனது 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது.

ஓலா டாடா நிறுவன ஒப்பந்தம் :

Hosur Investments : ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை டாடா குழுமம் ஆனது இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர். விரிவாக்கத்திற்குப் பிறகு ஓசூர் யூனிட்டில் 25,000 – 28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஒப்பந்தம் :

Hosur Investments : உயர்தர டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆனது அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கி உள்ளது. இந்த புதிய ஆலை ஆனது முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆனது ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த 2023ஆம்  ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆனது தீவிரமாக முயன்றது. இப்போதுதான் அதற்கான சூழ்நிலை வந்துள்ளது.

சமீபத்தில்தான் ஆப்பிள் நிறுவனம் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை அதன் விற்பனையாளராக தேர்வு செய்தது. ஆப்பிள் ஆனது சீனாவிலிருந்து வெளியேறி அதன் உற்பத்தியை வேறு நாடுகளில் செய்ய முயன்று வருகின்றது. அதன் முதல் கட்டமாக ஓசூரில் டாடா உடன் ஆப்பிள் நேரடியாக ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபோன் 17 உற்பத்தி :

சென்னையில் ஏற்கனவே ஐபோன் 16 உற்பத்தி தொடங்கி நடந்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் iPhone 17 உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீனாவிற்கு வெளியே புதிய ஐபோன் தயாரிப்பு தொடங்கும் என்று  முதல் முறையாக ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்படும் என்பதால் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. தற்போது சர்வதேச நிறுவனங்கள் சென்னையில் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகின்றன. அதனால் இந்த 2023 வருடம் ரூ.100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு ஆனது தமிழ்நாட்டில் நடத்தப்படும். கோயம்புத்தூர், விருதுநகர், வேலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய  இடங்களில் புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலமாக தமிழ்நாட்டில் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஆனது உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top