ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தாவில் முதலாவது அரையிறுதி முடிந்த நிலையில், அதில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு (Final) முன்னேறியது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்த (India vs England T20) உள்ளது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. மேலும் இரண்டு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டியில் விளையாடும் எனக் கணித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி
கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்ற நிலையில் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் (India vs England T20) நுழைந்தது. மேலும் 2010, 2022-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வி அடைந்த நிலையில் மற்ற 3 போட்டியிலும் வெற்றிப்பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் இலங்கை, பாகிஸ்தான், நியூஸிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
மீண்டும் எழுச்சி பெற்ற இந்திய அணி (India vs England T20)
சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு, இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. டாப் ஆர்டர் பேட்டர்கள் 3 பேரும் இடதுகை வீரர்களாக இருப்பது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சன் அணிக்கு (India vs England T20) கொண்டுவரப்பட்டார். இதன் மூலம் டாப் ஆர்டரில் இருந்த வலது கை, இடது கை காம்பினேஷன் பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் கடைசி வரை களத்தில் நின்று 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்திய அணிக்கு ஷேவாக் எச்சரிக்கை
”இங்கிலாந்து அணியை சுலபமாக ஜெயிக்கலாம்னு நினைக்காதீங்க” என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘நமக்குச் சாதகமான சூழ்நிலை இருப்பதால் நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம் கிடையாது. அதிலும் குறிப்பாக பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட (India vs England T20) வேண்டும். போட்டி முடிந்த பிறகு, நாம் அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்ற பேச்சுகளுக்கெல்லாம் நாக் அவுட் போட்டிகளில் இடமே இல்லை’ என ஷேவாக் எச்சரித்துள்ளார்.
கடைசி 5 ஓவரில் கவனம் தேவை
நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிக்கட்ட ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவரில் மட்டும் இந்திய அணி 75 ரன்கள் (India vs England T20) விட்டுக்கொடுத்தது. இதனால் இந்த இறுதிக்கட்ட ஓவர்களில் இந்திய அணி கூடுதல் கவனத்துடனும், புத்திசாலித்தனத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
3-வது முறையாக
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 3-வது முறையாக இந்தியா – இங்கிலாந்து அணிகள் அரை இறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் கடந்த 2022 மற்றும் 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களிலும் இரு அணிகளும் அரை இறுதியில் மோதி இருந்தன. இதில் 2022-ல் இங்கிலாந்து அணியும், 2024-ல் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன.
ஆடுகளம் எப்படி?
மும்பை வான்கடே மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவே இருக்கும். மைதானத்தின் எல்லைக்கோடுகள் அளவில் சிறியது என்பதால் சிக்ஸர் மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், மேலும் போட்டியின் தொடக்கத்தில் பந்துகள் நன்கு ‘ஸ்விங்’ ஆகும். இதை வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்திக் (India vs England T20) கொள்ளக்கூடும். பனிப்பொழிவை கருத்தில் கொண்டு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு உள்ளது.