Gistak Media – Cinema News | Trending News | Latest News

Indian Rupee Rises Against US Dollar : அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு உயர்கிறது

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது மாறி சற்றே எழுச்சி பெற தொடங்கி உள்ளது. அதாவது அமெரிக்க டாலர் குறியீட்டு எண் தளர்த்தப்பட்டதால் பிப்ரவரி 20-ம் தேதி அன்று அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 9 பைசா (Indian Rupee Rises Against US Dollar) உயர்ந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த 7 நாட்களில் (கடந்த வாரத்தில்), இந்திய பங்குச் சந்தைகளில் 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளதாகவும், மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பத்திரங்களில் கடந்த ஒரு மாதமாக முதலீடு செய்த தொகை 3 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளதாகவும் (Indian Rupee Rises Against US Dollar) அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்திய நாணயத்திற்கு ஒரு நிம்மதியை அளிக்கும் விதத்தில் கச்சா எண்ணெய் விலை மூன்று மாதங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் ஆனது 0.76% குறைந்தது. ஒரு பீப்பாய்க்கு $70.50 ஆக இந்த எண்ணெய் ஆனது வர்த்தகம் செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 18 பைசா உயர்ந்துள்ளது (Indian Rupee Rises Against US Dollar)

Indian Rupee Rises Against US Dollar - Gistakmedia

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பு அறிவிப்புகள் ஆனது உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் உள்ளன. டொனால்ட் டிரம்ப்பின் கட்டண உயர்வு அறிவிப்பால், உலக அளவில் பல எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சமீபத்திய வரிக் கொள்கைகளுக்கு எதிராக சீனா மற்றும் கனடா நாடுகள் போர்க் கொடியை (Indian Rupee Rises Against US Dollar) எடுத்துள்ளன.  சமீபத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆட்டோக்கள், மருந்துகள் மற்றும் செமிகண்டக்டர் மீது 25% வரிகளை விதிக்க முடிவு செய்துள்ளார்.  டொனால்ட் டிரம்பின் இந்த சமீபத்திய அச்சுறுத்தல்கள் இப்பொழுது உலக அளவில் பல எதிர்ப்புகளை கிளப்பி உள்ளது. இதுவே அமெரிக்க டாலரின் மதிப்பு குறைய முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா பர்ஸ்ட் (America First) என்ற கொள்கையை செயல்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக அமெரிக்கா ஆனது அமெரிக்கர்களுக்கு தான் என்றும், பிற நாடுகளை கடந்து அமெரிக்கா அனைத்திலும் முன்னிலை பெற வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.  டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் (Indian Rupee Rises Against US Dollar) வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். டொனால்ட் டிரம்பின் இந்த சமீபத்திய அறிவிப்பு ஆனது நேரடியாக பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். 

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மார்ச் 24-ம் தேதி அன்று 3 பைசா உயர்ந்து 85.94 ஆக தொடங்கியது. டாலர் குறியீட்டில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக ரூபாயும் ஓரளவு வலுப்பெற்றது. நிலையான வெளிநாட்டு நிதி வரத்து உள்ளூர் அலகுக்கு ஆதரவளித்தது.  இந்திய ரூபாயின் மதிப்பு இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம், பலவீனமான அமெரிக்க டாலரின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலை சரிவு போன்றவற்றின் காரணமாக 19 பைசா (Indian Rupee Rises Against US Dollar) உயர்ந்து ரூ.87 ஆனது இறுதி அமர்வில் டாலருக்கு எதிராக உள்ளூர் நாணய மதிப்பு 85.97 ஆக முடிந்தது.

இந்திய ரூபாய் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 1 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததால் கடந்த வாரம் சிறந்த வாரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு குறிப்புகள் காரணமாக  கடந்த வாரம் உள்ளூர் நாணயத்தில் ஏற்பட்ட இந்த உயர்வு ஆனது இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top