கலைமான் என்ற சொல்லில் கலை (ஆண் மான்) மற்றும் மான் (பெண் மான்) என்ற இரண்டு வார்த்தைகளின் (Interesting Facts About Reindeer) சேர்க்கையாகும். இந்த கலைமான்கள் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், அமெரிக்கா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் மட்டுமே தற்போது வாழ்கின்றன. மேலும் இந்த கலைமான் வகைகளில் ஆண் மான்களுக்கு மட்டுமே திருகலான கொம்புகள் உண்டு, பெண் மான்களுக்கு கொம்புகள் கிடையாது. இந்த திருகலான சுருள் கொம்புகள் கெரட்டின் என்ற நொதியால் உருவாகிறது. மேலும் ஆண் மான்கள் தங்கள் கொம்புகளை எதிரிகளுடன் சண்டையிடவும், பெண் மான்களை ஈர்ப்பதற்காகவும் பயன்படுத்துகின்றன.
கலைமான்களின் வாழ்விடம் (Interesting Facts About Reindeer)
கலைமான்கள் பொதுவாக புல்வெளிகள், அடர்ந்த காடுகள் மற்றும் புதர் நிலங்களில் வாழ்கின்றன. வாழும் இடங்களின் தன்மைக்கு ஏற்ப புதிய மாற்றங்களுக்கு தங்களை மாற்றிகொள்கின்ற பண்பை இந்த கலைமான்கள் பெற்றுள்ளன. சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டானியர் இந்தியாவை ஆண்டபோது பல்லாயிரக்கணக்கில் காணப்பட்ட இந்த மான்கள் வேட்டையாடுதல், விவசாயத்திற்காக காடுகள் அழிப்பு, சுற்று சூழல் அச்சுறுத்தல் காரணமாக தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.
உணவு பழக்கம்
கலைமான்கள் பொதுவாக புற்கள், இலைகள், பழங்கள், தாவர உண்ணிகள், பூக்களை உணவாக உண்கின்றன. மேலும் இவை தங்கள் (Interesting Facts About Reindeer) உணவை அசைபோடும் விலங்குகள் போல மீண்டும் உணவை வாய்க்கு கொண்டு வந்து நன்கு மென்று விழுங்குகின்றன.
கலைமான்களின் வேகம்
கலைமான்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டவை. மேலும் கலைமான்கள் மற்ற விலங்குகளின் வேட்டையாடுதலில் இருந்து தற்காத்துக்கொள்ள (Interesting Facts About Reindeer) வேகத்தையும் சுறுசுறுப்பையும் பயன்படுத்துகின்றன. மேலும் ஆண் மான்கள் தற்காப்புக்காக திருகலான கொம்புகளை பயன்படுத்துகின்றன.
பாதுகாப்பு நிலை
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமான International Union for Conservation of Nature (IUCN) கலைமான்களை ‘அழிவின் விளிம்பில் உள்ள இனம்’ (Vulnerable) என்ற பட்டியலில் வகைப்படுத்தியுள்ளது.
மாநில விலங்கு
கிருஷ்ண ஜின்கா என இந்தியாவில் அழைக்கப்படும் கலைமான்கள் பஞ்சாப், ஹரியானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மாநில விலங்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைமான்கள் இந்திய துணைக்கண்டத்தில் அவற்றின் தனித்துவமான (Interesting Facts About Reindeer) கொம்புகள், வேகமாக ஓடும் திறன் மற்றும் சமூக நடத்தை ஆகியவை அவற்றை மிகவும் சுவாரசியமான விலங்குகளாக ஆக்குகின்றன. இந்த அற்புதமான உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.