Kyasanur Forest Disease : மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல்
Kyasanur Forest Disease - உலக மக்களை அச்சுறுத்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது :
உலகில் கொரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்து வந்த நிலையில் உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் (Kyasanur Forest Disease) ஆனது தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இதன் பாதிப்பு ஆனது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் திடீரென அதிகரித்து வருகிறது.
பெல்ஜியம் அரசு ஆனது குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தலைக் கட்டாயமாக்கியுள்ளது. கடந்த 21 Jan 2024 நிலவரப்படி மொத்தம் 12 நாடுகளில் 92 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஆனது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரஸ் காய்ச்சல் இந்திய நாடு முழுவதிலும் 90 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்சா-ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வருகிறது. கர்நாடகா மற்றும் ஹரியானாவில் இந்த காய்ச்சலின் (Kyasanur Forest Disease) தீவிரத்தால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு ஆனது அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சலால் 15 வயதுக்கு குறைவானவர்களும் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, மற்றும் வயிற்றுப்போக்கு ஆகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய சுகாதாரத் துறை ஆனது மாநில அரசுகளுக்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 1,300 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. பொது இடங்களுக்கு செல்லும்போது முன்னெச்சரிக்கையாக மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இந்த புதிய வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை மற்றும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சூழலும் பெரிய அளவில் இல்லை. எனவே, மக்கள் பெரிதாக அச்சம்கொள்ள வேண்டியதில்லை. இந்த புதிய வைரஸ் காய்ச்சலால் (Kyasanur Forest Disease) பாதிக்கப்படுவோர் 4 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டாலே நன்றாக குணமடையலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!