Mansoor Ali Khan Apology :
மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய நிலையில், தற்போது அறிக்கை ஒன்றை (Mansoor Ali Khan Apology) வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், “என்னுடைய சக நடிகை த்ரிஷா, என்னை மன்னித்து விடுங்கள்” என்று மன்சூர் அலிகான் மன்னிப்பு (Mansoor Ali Khan Apology) கேட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், அடக்க மறுத்தால் அடங்க மறு. இப்ப சொல்கிறேன், என்னை மன்னித்து விடு. ஒரு வாரமாக கத்தியின்றி, ரத்தமின்றி நடந்த போரில் நான் வெற்றி பெற்றுவிட்டேன். எனக்காக வாதாடிய தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். என்னைக் கண்டித்த மக்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. சாம்ராட் அசோகரின் இதயம் இரத்தம் கசிந்து லட்சக்கணக்கானோர் இறந்தபோது அகிம்சையை தழுவியது. ஆம், மனசாட்சியே இறைவன். காவல் அதிகாரி த்ரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது என சொல்ல, நானும் வருந்துகிறேன் என்று சொல்ல வந்துவிட்டேன்.
சட்டம் வென்று வெளியே வந்தால், கோரப்பசியுடன் மீண்டும் கோழிக்குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண். மணிப்பூர், ஹாத்ராஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக் கலவரங்களை சாட்டையடியாக கேள்வி கேட்க மாறுகிறது. திரையுலகில் என் இளமையை இழந்தேன். திமிங்கலமாக உலா வரும் போது, பாத்திரங்கள் சிறிய மீன்களாக மாறின. இனி வரும் நாட்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட இறைவா சக்தியை கொடு. என் மக்கள், மடலான ரசாயன உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளைநிலங்கள் சதுப்பு நிலங்களாக மாறும். கனிமங்கள், மலைகள், ஆறுகள் காணடிக்கப்பட்டு வேலையில்லாமல் நிற்கிறோம். பிள்ளைகள் பிழைக்க சூரியன் மறையும் முன் குடும்பத்தைக் காக்க பாடுபடுவோம். மாதத்தில் 10 நாட்கள் கடினமாக உழைத்தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல், கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை சாமான்கள் என ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக உழைத்து சம்பளம் வாங்கினால்தான் அதானிக்கு கம்பம் கட்ட முடியும்.
பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது. தாய்க்கு சேவை செய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 முறை தொழுது, ஓதி, கிராம்பு நீரை அளித்து, பாம்பு, பூரான், தேள் கடிபட்டவர்களுக்கு நல்லருள் புரிந்தார். 10ம் வகுப்பு வரை சினிமா பார்க்கவில்லை. இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்காக சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்வை அருளும்! எனது சக திரைநாயகி த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு. இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும் போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக! என்று மன்சூர் அலிகான் (Mansoor Ali Khan Apology) கூறியுள்ளார்.