Gistak Media – Cinema News | Trending News | Latest News

New Low Pressure : வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை (New Low Pressure) பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து  சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக தென்மாவட்டங்களை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், மற்றொரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடலில் வரும் 25-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செப்டம்பர் 27-ம் தேதி ஒடிசா – ஆந்திர கடலோரம் கரையை கடக்க உள்ளதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு கனமழை (New Low Pressure)

வரும் செப்டம்பர் 25-ம் தேதி முதல் தமிழகத்தின் தேனி, நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மூன்று நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செப்டம்பர் 26-ம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை

New Low Pressure - Gistakmedia

தென்மேற்கு பருவமழை காலம் தற்போது முடிந்துள்ளதால் வரும் அக்டோபர் 3வது வாரத்தில் தமிழக்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் எனவும், மேலும் இந்த முறை வழக்கத்தை (New Low Pressure) விட மழையின் அளவு தீவிரமாகவே இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழைக்கே சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top