Nobel Prize 2025 Medicine: மருத்துவ துறைக்கான நோபல் பரிசு.. 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிப்பு..!
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய 6 துறைகளில் சிறப்பான பங்களிப்பை (Nobel Prize 2025 Medicine) வழங்கியவர்களுக்கு ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ‘ஆல்ஃபிரட் நோபல்’ நினைவாக நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்த 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், நேற்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வல்லுநர்களுக்கு நோபல் பரிசு (Nobel Prize 2025 Medicine)
இந்த 2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளைத் தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ.பிரன்கோவ் (Mary E.Brunkow), ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நோபல் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ் மற்றும் ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோர், மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பற்றி ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கண்டுபிடிப்புகள், புற்று நோய் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி மூலம் சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்சிக்கு (Nobel Prize 2025 Medicine) வழிவகுத்துள்ளன. மேலும், உடலின் சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தி மண்டலம், ஒழுங்குப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், அது நமது உடல் உறுப்புகளையே தாக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் நவீன நோய்தடுப்பாற்றலை மாற்றியமைத்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பாதுகாவலர்கள் மற்றும் ஒழுங்குமுறை D செல்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு புதிய ஆராய்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளனர். இந்த புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவ பரிசோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்படும் சிகிச்சை முறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நோபல் பரிசு பெறுபவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழுடன், ரூ.10.41 கோடி பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.
மருத்து துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியல் துறைக்கு அக்டோபர் 7-ம் தேதியும், வேதியியல் துறைக்கு அக்டோபர் 8-ம் தேதியும், இலக்கியத்திற்கு அக்டோபர் 9-ம் தேதியும், பெரிதும் எதிர்ப்பார்க்கபடும் அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 10-ம் தேதியும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அக்டோபர் 13-ம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!