Gistak Media – Cinema News | Trending News | Latest News

Nobel Prize in Literature 2025: இலக்கியத்திற்கான நோபல் பரிசு..ஹங்கேரி எழுத்தாளருக்கு அறிவிப்பு..!

உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக (Nobel Prize in Literature 2025) நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு, உடலில் உள்ள நோயெதிர்ப்பு அமைப்பானது, அதன் சொந்த உடல் உறுப்புகளை தாக்காமல் எப்படி கட்டுக்குள் வைக்கிறது என்ற ஆராய்ச்சிக்காக அமெரிக்​காவை சேர்ந்த மேரி இ.பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி என்ற 3 மருத்துவ வல்லுநர்களுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு குவாண்​டம் ஊடுருவல் குறித்த ஆய்​வுக்​காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் எம்.மார்டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, கார்பன் அடிப்படையிலான மூலக்கூறுகள் இணைந்து உருவாக்கும் ஒரு புதிய வகை மூலக்கூறு கட்டமைப்பை கண்டுபிடித்ததற்காக ஜப்பானை சேர்ந்த க்யோடோ பல்கலைகழகத்தின் பேராசிரியர் சுசுமு கிடகவா, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெல்போர்ன் (Nobel Prize in Literature 2025) பல்கலை பேராசிரியர் ரிச்சர்ட் ராப்சன், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலை பேராசிரியர் ஒமர் எம்.யாகி ஆகியோருக்கு இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Literature 2025)

Nobel Prize in Literature 2025 - Gistakmedia

இதனை தொடர்ந்து தற்போது 2025 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டை சேர்ந்த எழுத்தாளர் லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், கலைக்கு இருக்கும் சக்தியை நம்பிக்கையூட்டும் (Nobel Prize in Literature 2025) வகையில் தனது தனித்துவமான, தொலைநோக்கு பார்வை கொண்ட படைப்புகள் மூலம் வெளிப்படுத்தியதற்காக இவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஹங்​கேரி​யில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்​தார். இவரின் படைப்​பு​கள் அனைத்​தும் தொலைநோக்கு பார்வை கொண்​ட​வை. இவரது முதல் நாவலான ‘சாட்​டன்​டாங்​கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியாகி பிரபலம் அடைந்தது. இவர் எழு​திய ‘ஸ்​பேட்​வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்​ரிங் தி மேட்​னஸ் ஆஃப் அதர்​ஸ்’ என்ற சிறுகதை​யும் பிரபலம் அடைந்​தது. சர்வதேச அளவில் தீவிர​வாதம் அழிவை ஏற்​படுத்​திக் கொண்​டிருக்​கும் சூழலில், இவரது படைப்​பு​கள் கலை​யின் சக்​தியை ஊக்குவிக்கின்றன. இதற்​காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக நோபல் பரிசுக் குழுமம்  தெரி​வித்​துள்​ளது. அதேபோல் மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்க வேண்டும் என இஸ்ரேல், பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top