இந்த ஆண்டு பங்குனி உத்திர விழா ஏப்ரல் 11 ஆம் தேதி (Panguni Uthiram Celebration 2025) கொண்டாடப்படுகிறது. இந்த பங்குனி உத்திர விழாவானது சிவன் மற்றும் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மங்களகரமான திருவிழாவாகும். பங்குனி உத்திரம் மீன உத்திர பால்குனி விழா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விழா தமிழ்நாட்டில் மிகவும் ஆடம்பரமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா முருகன், ஐயப்பன், சிவன் மற்றும் மகாவிஷ்ணு போன்ற கடவுள்களுக்காக கொண்டாடப்பட்டாலும், இது முருகனுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. முருகன் தமிழ்நாட்டில் வாழும் இந்து மக்களின் முக்கிய கடவுளாக இருக்கிறார்.
பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வருகிறது. பங்குனி மாதம் பொதுவாக ஒரு புனித மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, பங்குனி உத்திர விழா மற்றும் அதன் சிறப்புகளை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
பங்குனி உத்திர வரலாறு (Panguni Uthiram Celebration 2025)
பங்குனி மாதத்தில், முருக பக்தர்கள் தேர் இழுத்து, காவடி எடுத்து, பால் அபிஷேகம் செய்வது இந்த மாதத்தின் தனிச்சிறப்பாகும். பங்குனி மாதத்தில் மிக முக்கியமான விரத நாள் பங்குனி உத்திரம். அதாவது, பங்குனி மாதத்தில் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாளையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். பங்குனி உத்திரம் பல தெய்வீக (Panguni Uthiram Celebration 2025) திருமணங்கள் நடந்த நாளாகக் கருதப்பட்டாலும், தமிழ் கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதால் இது ஒரு முக்கியமான விரத நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதன் மூலம், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கும் என்று நம்பப்படுகிறது. சிவன்-பார்வதி, மீனாட்சி-சுந்தரேஸ்வரர், ஸ்ரீராமர்-சீதை, முருகன்-தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் பங்குனி உத்திரத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல், ஆண்டாள் ரங்கநாதருடன் இணைந்த நாள் பங்குனி உத்திரத்தில் என்று கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
பங்குனி உத்திர கொண்டாட்டங்கள்
பங்குனி உத்திரத்தன்று, கோயிலுக்குச் சென்று சிவ-பார்வதி அல்லது முருகன்-தெய்வானையை வழிபடுவார்கள். அங்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்பது செல்வத்தையும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையையும், தெய்வீக அருளையும் தரும். கோயிலுக்குச் (Panguni Uthiram Celebration 2025) சென்று தெய்வங்களின் நாமங்களை உச்சரிப்பது மிகவும் மங்களகரமானது. பக்தர்கள் கோயில்களில் நடைபெறும் அபிஷேகத்திற்கு பால், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை வாங்கி தருகின்றனர். இது தெய்வங்களை திருப்திப்படுத்தி, நாம் விரும்பும் வரங்களை வழங்கும் என்று நம்பப்படுகிறது. தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம், நாம் பாவங்களிலிருந்து விடுபட்டு, மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும்.
பங்குனி உத்திரத்தன்று காவடி எடுத்துச் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. முருகப்பெருமானுக்கு காவடி எடுத்துச் செல்வதன் மூலம், முருகனின் முழுமையான அருளைப் பெறலாம். தெய்வீக எண்ணங்களுடன் தோளில் காவடி சுமந்து (Panguni Uthiram Celebration 2025) செல்வதன் மூலம், முருகப்பெருமான் நம் வாழ்வில் உள்ள அனைத்து மனச் சுமைகளையும் நீக்குவார் என்று நம்பப்படுகிறது. மேலும் பக்தர்கள் தங்கள் உடலில் அலகு போடுதல், தேர் இழுத்தல், நாக்கில் வேல் போடுதல் போன்ற நேர்த்திக் கடனை செய்வார்கள்.
பங்குனி உத்திரம் 2025
2025-ம் ஆண்டு பங்குனி உத்திர திருநாள் வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 11 அன்று வருகிறது. உத்திர நட்சத்திரம் (Panguni Uthiram Celebration 2025) ஏப்ரல் 10-ம் தேதி பிற்பகல் 02.07 மணி முதல் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 04.11 மணி வரை மட்டுமே உள்ளது. மேலும் பௌர்ணமி திதி ஏப்ரல் 12-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இருக்கிறது. பங்குனி உத்திரம் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படும் விரத நாள் என்பதால், உத்திர நட்சத்திரம் வரும் ஏப்ரல் 11-ம் தேதி பங்குனி உத்திரமாக விரதத்தை அனுசரிக்க வேண்டும்.