Gistak Media

RCB Qualified For 2025 IPL Finals : பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி 9 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது ஆர்சிபி

18வது ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது (RCB Qualified For 2025 IPL Finals) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

பேட்டிங்கில் சொதப்பிய பஞ்சாப்

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இருவரும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஓவரில் ப்ரியன்ஷ் ஆர்யா 7 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்னிலும், பிரப்சிம்ரன் 18 ரன்னிலும், ஜாஸ் இங்கிலீஷ் 4 ரன்னிலும், ஷஷாங் சிங் 3 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 26 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறியதால் பஞ்சாப் கிங்ஸ் அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் சுயாஷ் சர்மா மற்றும் ஹேசில்வுட் தலா 3 விக்கெட்டும், யாஷ் தயாள் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஆர்சிபி அணிக்கு 102 ரன்கள் இலக்கு

102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தொடக்க வீரரான ஃபில் சால்ட் 27 பந்துகளில் அரைசதம் அடிக்க, மறுமுனையில் ஆடிய விராட் கோலி 12 ரன்னில் வெளியேறினார். பிறகு களத்திற்கு வந்த மயங்க் அகர்வால் 19 ரன்னில் வெளியேறியதால், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் உதவியுடன் 10 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் அணியாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

RCB Qualified For 2025 IPL Finals - Gistakmedia

9 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆர்சிபி (RCB Qualified For 2025 IPL Finals)

ஆர்சிபி கடைசியாக 2016-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த நிலையில் 9 வருடங்களுக்கு பிறகு 4வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தற்போது முன்னேறியுள்ளது. மேலும் 10 ஓவர் (60 பந்துகள்) மீதம் வைத்து அதிக பந்துகள் வித்தியாசத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் அணி என்ற புதிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top