Gistak Media – Cinema News | Trending News | Latest News

Scheme For Farmers To Get Crop Loans Online : விவசாயிகள் ஆன்லைன் மூலம் பயிர் கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாட்டில் முதன்முறையாக  விவசாயிகள் ஆன்லைன் (Scheme For Farmers To Get Crop Loans Online) மூலமாக  தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து பயிர் கடன் பெறும் திட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது.    முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப்பேரவையில் விவசாயிகள் வங்கி கணக்கில் விண்ணப்பித்த அன்றே கடன் பெறும் சிறப்பு  திட்டம் ஏற்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் அதிகபட்ச கடன் வரம்பு  ஆனது ரூபாய்  ஐந்து லட்சம் ஆகும்.   விவசாயிகள்  இத்திட்டத்தின் மூலமாக  ரூபாய்  ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் பெற்று பயன் பெற முடியும். 

இந்த முறை  தருமபுரிக்கு அரசியல் பயணம் மேற்கொண்ட  முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை சிறப்பாக்கினார்.  அந்த சிறப்பு தருணத்தை பயன் படுத்தி  இந்த சிறப்பு  திட்டத்தை இன்று (17.08.2025) தருமபுரியில்  தொடங்கி வைத்தார்.  விவசாயிகள் ஆன்லைன் மூலமாக விண்ணபித்த அன்றே பயிர்கடன் பெறும் சிறப்பு  திட்டம் ஆகும்.   

இத்திட்டம் ஆனது 17.08.2025 தேதி முதல் தருமபுரியில்  உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள் அனைத்திலும் அமல் படுத்தப்பட்டது. இத்திட்டம் 17.08.2025  அன்று சிறப்பாக முதன் முதலாக தொடங்கப்பட்ட இடம்  தருமபுரி என்ற பெருமையை  தருமபுரி மாவட்டம்  பெற்றுள்ளது.  இத்திட்டம் ஆனது விரைவில் தமிழக மாநிலம் முழுவதும் அமல் படுத்தப்பட  உள்ளது.

 

விண்ணபித்த அன்றே விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் திட்டம் (Scheme For Farmers To Get Crop Loans Online)

Scheme For Farmers To Get Crop Loans Online - Gistakmedia

வழக்கமாக நேரடியாக கடன் பெறும் நடை முறையில் விவசாயிகள் ஆவணங்களை கூட்டுறவு வங்கிகளில் நேரில் சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் ஆவணங்களை சரி பார்க்க ஏழு தினங்கள் எடுத்து கொள்வார்கள். இத்திட்டம் ஆனது இந்த கால தாமதத்தை தவிர்க்கும். இந்த விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் முன்னோடி திட்டம் சிறப்பானது.

விவசாயிகள் இ-சேவை மையங்கள் மூலமாக மற்றும் வீட்டில் (Scheme For Farmers To Get Crop Loans Online) இருந்தபடியே நேரடியாக விண்ணப்பிக்கலாம். இ-கிஷான் கிரெடிட் கார்டை சிறப்பாக பயன் படுத்தலாம் அவ்வாறு விவசாயிகள் விண்ணபித்த அன்றே அதிகாரிகள் உடனடியாக ஆவணங்களை சரி பார்த்து பயிர்கடன் வழங்குவார்கள். இத்திட்டத்தின் மூலமாக விவசாயிகள் சிறந்த முறையில் விவசாயம் செய்ய ரூபாய் ஐந்து லட்ச ரூபாய் வரை பணம் பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top