-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
Success Of A2B Adayar Anandha Bhavan : அடையார் ஆனந்த பவனின் வேகமான வளர்ச்சி
சென்னையின் அடையாரை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பிரபலமான இந்திய தொடர்சங்கிலி சைவ உணவகம் A2B என்று அழைக்கப்படும் அடையார் ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகும். இது ஒரு பட்டியலிடப்படாத ஒரு தனியார் நிறுவனமாகும். 1988 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆனது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 150 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் நன்கு அறியப்பட்ட மற்றும் புகழ்பெற்ற பிராண்டாக வளர்ந்துள்ளது.
அடையார் ஆனந்த பவன் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிக் கதை (Success Of A2B Adayar Anandha Bhavan)
விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த கே.எஸ்.திருப்பதி ராஜா மதுரைக்கு அருகிலுள்ள ராஜபாளையத்தில் 1960 களின் முற்பகுதியில் குரு ஸ்வீட்ஸ் என்ற சிறிய இனிப்புக் கடையைத் திறந்தார். மனைவி முத்துலட்சுமியின் உதவியுடன் ராஜா, கோதுமை ஹல்வா, லட்டு, ஜஹாங்கீர் (ஜிலேபியின் தடிமனான பதிப்பு), பாதுஷா மற்றும் மைசூர் பாக் போன்ற இனிப்புகளை விற்றார்.
திருப்பதி ராஜா இனிப்புகள் செய்வார், மனைவி முத்துலட்சுமி அவருக்கு உதவுவார். ராஜபாளையத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த சீனிவாச ராஜா படிப்பை நிறுத்திவிட்டு அவரது அப்பா, அம்மாவுக்கு உதவுவார். அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு இனிப்பு சப்ளை செய்வார். அவரது (மூத்த) அண்ணன் கே.டி.வெங்கடேசன் கடையை கவனிப்பார்.
திருப்பதி ராஜா மல்லேஸ்வரம் அருகே பெங்களூருவில் 1978ல் ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் என்ற மற்றொரு இனிப்புக் கடையைத் திறந்தார். திருப்பதி ராஜாவும் அவரது மூத்த மகன் கே.டி.வெங்கடேசனும் 1979 ஆம் ஆண்டில் சென்னையில் வண்ணாரப்பேட்டையில் தங்கள் முதல் கடை ஸ்ரீ ஆனந்த பவனை நிறுவினர்.
சென்னை அடையாறில் 1988 இல் திருப்பதி ராஜா, அவரது மூத்த மகன் டி.வெங்கடேசன் மற்றும் அவரது இளைய மகன் சீனிவாச ராஜா சேர்ந்து தங்கள் இரண்டாவது சென்னை ஸ்ரீ ஆனந்த பவன் விற்பனை நிலையத்தைத் திறந்தனர். வேகமாக வளர்ந்த ஸ்ரீ ஆனந்த பவன் ஆனது அடையார் ஆனந்த பவன் என்ற பெயர் பெற்றது.
மூன்றாவது விற்பனை நிலையம் 1992 ஆம் ஆண்டில் புரசைவாக்கத்தில் திறக்கப்பட்டது மற்றும் அடுத்தடுத்து பிற விற்பனை நிலையங்கள் விரைவாக திறக்கப்பட்டன. 1994-ல் அவர்களின் வருடாந்திர வருவாய் ரூ.100 கோடியைத் தாண்டியது. சென்னையில் 2000 ஆம் ஆண்டில் 20 கிளைகள் திறக்கப்பட்டு வருடாந்திர வருவாய் ரூ.150 கோடியைத் தொட்டது. பாண்டிச்சேரியில் முதல் A2B உணவகம் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இப்போது உலகளவில் அமெரிக்காவில் இரண்டு, மலேசியாவில் ஒன்று மற்றும் சிங்கப்பூரில் ஒன்று என சுமார் 140 விற்பனை நிலையங்களை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 63 கிளைகளைக் கொண்டுள்ளது. மேலும் பல விற்பனை நிலையங்களில் A2B சைவ உணவகம் ஆனது இணைக்கப்பட்டுள்ளது.
Adayar Anandha Bhavan Marketing Strategy :
அடையார் ஆனந்த பவன் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடும் விதத்தில் புதிய வகை இனிப்பு வகைகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய வகை இனிப்பு வகைகளை தயாரிப்பதற்காக ராஜஸ்தான், வங்காளம், பஞ்சாப் மற்றும் உ.பி.யில் இருந்து மக்களை அழைத்து வரப்பட்டனர். இந்த புதிய வகை இனிப்பு வகைகள் இங்குள்ள வாடிக்கையாளர்களிடையே வெற்றி பெற்றன.
தினமும் படுக்கையில் இருந்து எழும்புவதற்கு முன் ஸ்ரீனிவாச ராஜா “நான் ஒரு நல்ல கணவனாக, நல்ல தந்தையாக, நல்ல முதலாளியாக, சமுதாயத்திற்கு பயனுள்ள குடிமகனாக இருக்க வேண்டும்” என்ற ஒரு எளிய 4-புள்ளி பிரார்த்தனையில் தொடங்குகிறார்.
ஸ்ரீநிவாச ராஜா, “ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தயாரிப்பதில் உலகப் புகழ்பெற்ற நிறுவனமாக இந்தத் தலைமுறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே தமது எதிர்காலத் திட்டம். அதனால் ஆரோக்கியமான உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆன புரதம், தாதுக்கள் மற்றும் ஒமேகா 3 நிறைந்த உணவை தயாரிப்பது குறித்து தான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் ஒவ்வொரு 200 கி.மீ. தொலைவிலும் ஒரு அடையார் ஆனந்த பவன் விற்பனை நிலையத்தை அமைப்பதே தனது நோக்கம்” என்று கூறினார்.
A2B இன் வருடாந்திர வருவாய் :
மூன்று தசாப்தங்களில், சென்னையை தளமாகக் கொண்ட அடையார் A2B ஆனந்த பவனின் வருடாந்திர வருவாய் ₹31 லட்சத்திலிருந்து சுமார் ₹800 கோடியாக உயர்ந்துள்ளது. இப்போது 8,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. அமெரிக்கா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் அதன் விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. ஸ்ரீநிவாச ராஜா, “வெற்றி என்பது திறமைக்கும் அதிர்ஷ்டத்திற்கும் சமம். தங்களது அதிக திறமை மற்றும் அதிக அதிர்ஷ்டம் தான் தங்களது வெற்றிக்கு காரணம்” என்று கூறுகிறார்.
Latest Slideshows
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?