-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Tamil Nadu Police FIR Complaint : தமிழகத்தில் இனி எந்த காவல் நிலையத்திலும் எப்ஐஆர் பதிவு செய்யலாம்
தமிழகத்தில் காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட குற்றம் தொடர்பான புகாராக இருந்தாலும் இனி எந்த காவல் நிலையத்திலும் (Tamil Nadu Police FIR Complaint) புகார்களை பதிவு செய்யும் வகையில் தமிழக அரசு குற்றவியல் நடைமுறை விதிகள் 2025-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த நேரத்திலும் எவ்விடத்திலும் புகார் அளிக்க முடியும்.
குற்றவியல் நடைமுறை விதிகள் (Tamil Nadu Police FIR Complaint)
காவல் நிலையத்தின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்ட குற்றம் தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டதும், முதல் தகவல் அறிக்கை (FIR) 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மாற்ற நவீன தொழில்நுட்பத்துடன் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக டிஜிட்டல் முறையில் சம்மன் அனுப்புதல், சாட்சிகளை பதிவு செய்ய இ-சாக்ஷ்யா (eSakshya) செயலியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறை அதிகாரிகளுக்கு குற்றவியல் நடைமுறை விதிகள் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் குற்றவாளிகளை விரைவாகவும், திறம்படவும் கையாள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகநீதி வழங்கப்படுவதை அரசு உறுதி செய்கிறது. இந்த குற்றவியல் நடைமுறை விதிகள் 2025-ன் அமலாக்கம் மாநிலம் முழுவதும், காவல்துறையின் செயல்பாடுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த புதிய விதிகள் மூலம் குற்றங்கள் குறித்த புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.
எப்படி செயல்படும்
இந்த குற்றவியல் நடைமுறை விதிகளின்படி, ஒரு காவல் நிலையம் தனது அதிகார எல்லைக்கு வெளியே நடந்த குற்றங்கள் தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை (FIR) பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு (Tamil Nadu Police FIR Complaint) செய்யப்பட்ட எப்ஐஆர்-ஐ 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு, நேரில் அல்லது மின்னணு முறையில் அனுப்ப வேண்டும். இந்த விதிகள், ஒன்றிய அரசின் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) உடன் இணைந்து மாநிலத்தின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றவியல் நடைமுறை விதிகள் குறித்து தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் கூறுகையில் ‘இந்த குற்றவியல் விதிகள் காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் சீரான நடைமுறையை உறுதி செய்வதோடு, குற்றவியல் நடைமுறை நிர்வாகத்தில் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்கும். மேலும் நீதித்துறை ஒருங்கிணைப்பு, குற்றவியல் சட்ட அமலாக்கம், நடைமுறை சீர்திருத்தங்கள் என மாநிலம் முழுவதும் ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
Latest Slideshows
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!