Tata Plans New iPhone Factory : ஆப்பிள் நிறுவனத்துடன் TATA குழுமம் ஒத்துழைக்கிறது
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 கோடிக்கும் அதிகமான ஐபோன்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது :
இதனால் உலகளாவிய iPhones உற்பத்தியில் கால் பங்கை இந்தியா ஆனது வகிக்கும். Apple மற்றும் அதன் Suppliers அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான iPhones-களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்பிறகு கூடுதலாக 10 மில்லியன் iPhones-களை உருவாக்குவதை திட்டமிட்டுள்ளன என்று Wall Street Journal தெரிவித்துள்ளது.
ஏனெனில் சீனாவிலிருந்து சில உற்பத்திகளை மாற்றுவதை Apple Inc நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சீனாவிற்கு அப்பால் ஆப்பிளின் செயல்பாடுகளை பல்வகைப்படுத்துவதை உள்ளடக்கியது. இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பிற நாடுகளில் அசெம்பிளி மற்றும் உதிரிபாக உற்பத்தியில் கூட்டு முயற்சிகள் உள்ளன. இருந்தபோதும் சீனா இன்னும் பெரிய Apple iPhones தயாரிப்பாளராக தொடரும் என்று Apple Inc அறிக்கை குறிப்பிடுகிறது.
Tata Plans New iPhone Factory - ஆப்பிளின் இந்தியா விரிவாக்கத்தை TATA குழுமம் துரிதப்படுத்துகிறது :
Tata Plans New iPhone Factory : Apple-ன் முக்கிய சப்ளையர் TATA குழுமம் இப்போது இந்தியாவின் மிகப் பெரிய iPhones அசெம்பிளி ஆலைகளில் (Tata Plans New iPhone Factory) ஒன்றை உருவாக்கத் தயாராகி வருவதால், இந்தியாவில் அதிக தொழிற்சாலைகளை உருவாக்க FOXCON திட்டமிட்டுள்ளது. இந்தியா நடப்பு நிதியாண்டில் (FY24) ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 5.5 பில்லியன் டாலர் (ரூ.45,000 கோடிக்கு மேல்) மதிப்புள்ள போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக அரசு மற்றும் தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. வர்த்தகத் துறை மற்றும் இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA), IANS மதிப்பீடுகளின்படி 2022-23 நிதியாண்டில் ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் $3 பில்லியன் (சுமார் ரூ.25,000 கோடி) ஆக இருந்த மொபைல் போன் ஏற்றுமதிகள், 2023-24 நிதியாண்டில் இதே ஏப்ரல்-ஆகஸ்ட் காலகட்டத்தில் 5.5 பில்லியன் டாலர் (ரூ.45,000 கோடிக்கு மேல்) மதிப்புள்ள போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கின்றன.
மொத்த மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசி ஏற்றுமதிகள் 50%-கும் அதிகமாக முதன்முறையாக விஞ்சியது. ஆப்பிள் நாட்டின் மொத்த 12 மில்லியன் ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 50%-தை கடந்த 2023 ஜூன் மாத காலாண்டில் அனுப்பியுள்ளது. Samsung 45% ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்பிளி ஆலைகளில் ஒன்றை Apple Inc அதன் உற்பத்தி இருப்பை அதிகரிக்க தமிழகத்தில் உள்ள ஓசூரில் உருவாக்க திட்டமிட்டுள்ளது என டாடா நிறுவனம் (Tata Plans New iPhone Factory) தெரிவித்துள்ளது. இந்த ஆலையை Apple. நிறுவுவதன் மூலம் டாடாவுடனான அதன் கூட்டாண்மையை வலுப்படுத்துவதை மற்றும் விநியோகச் சங்கிலியை உள்ளூர்மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சுமார் 20 அசெம்பிளி லைன்களைக் கொண்டிருக்கும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் 50,000 தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்று தெரிவித்துள்ளது. 12 முதல் 18 மாதங்களில் தளம் செயல்பட வேண்டும் என்பதே இலக்கு. இந்தியா நடப்பு நிதியாண்டில் மொபைல் போன் ஏற்றுமதியில் ரூ.1,20,000 கோடியைத் தாண்டியது, ஆப்பிள் நிறுவனம் FY24 இல் 50 சதவீதத்திற்கும் மேலாக சந்தையில் முன்னணியில் உள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!