-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
Thuthikkeerai Benefits In Tamil : துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக அனைத்து கீரைகளும் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஒவ்வொரு கீரைக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள் உண்டு என்று பண்டைய சித்த மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் சரியான முறையில் கீரைகளை (Thuthikkeerai Benefits In Tamil) பயன்படுத்தினால் நல்ல திடமான உடல் நலமும், ஆரோக்கியமும் பெறலாம். இந்த பதிவில் துத்திக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
துத்திக்கீரை நன்மைகள் (Thuthikkeerai Benefits In Tamil)
உடல் உஷ்ணம் குறைய
துத்திக்கீரை எப்போதும் உடம்புக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. உடம்பில் அதீத உஷ்ணக்கோளாறுகள் இருந்தால் துத்தி இலைகளை சுத்தம் செய்து பொடிப்பொடியாக தூள் செய்து, சுத்தமான பசும்பாலில் கலந்து வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் உஷ்ண கட்டிகள், புண், போன்றவை விரைவில் ஆறிவிடும். மேலும் துத்தி இலையை அதில் வரும் சாறை (சாறு) காலை வேலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூல நோய் கட்டுக்குள் வரும்.
மலட்டுத்தன்மை
இன்றைய சமூகத்தில் பொதுவாக ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை என்றால் அது மலட்டுத்தன்மை தான். இந்த மலட்டுத்தன்மை சிக்கலுக்கு துத்திப்பூக்கள் உதவுகிறது. ஒரு கைப்பிடி அளவு துத்திப் பூவை எடுத்து அதை பசும்பாலுடன் (Thuthikkeerai Benefits In Tamil) சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால், உடலில் வெப்பம் தணிந்து ஆண்மை குறைபாடு நீங்கும். மேலும் தாது விருத்தியும், விந்து உற்பத்தித்திறனும் அதிகரிக்கும்.
கருப்பை கோளாறுகள்
துத்தி இலையை மிதமான சூட்டில், நெய்யில் வதக்கி வெள்ளை சாதத்துடன் சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறு பிரச்சனை நீங்கும். மேலும் பெண்களுக்கு அதிக வெள்ளைப்படுதல் இருந்தால், இந்த துத்திக்கீரை விதையை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.
எலும்பு முறிவு
எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் இந்த துத்தி இலையை அரைத்து நாட்டு துணியால் கட்டுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு விரைவாக கூடிவரும். மேலும் இந்த துத்தி இலையை ரசம் வைத்து குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, குடல்புண்கள் மற்றும் வாயு வியாதிகள், சிறுநீரக சம்மந்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது.
Latest Slideshows
-
Smartphone Usage Increases Dopamine Levels : ஸ்மார்ட்போன் பயன்பாட்டால் அதிகரிக்கும் டோப்பமைன்.. மருத்துவர்கள் எச்சரிக்கை?
-
Gynandromorph Butterfly : பாதி ஆண், பாதி பெண்.. ஒரே உடலில் 2 பாலினம் கொண்ட அதிசய பட்டாம்பூச்சி.!
-
Hatsun Founder Success Story : ஹட்சன் அக்ரோ புராடக்ட் லிமிடெட்டின் நிறுவனர் ஆர்.ஜி.சந்திரமோகனின் வெற்றிக் கதை.!
-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!