தமிழக அரசு ஆனது தமிழக அரசின் பட்ஜெட் லோகோவில் ‘₹’ என்ற சின்னத்திற்கு பதிலாக ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தை (TN Govt Introduced A New Budget Logo) தேர்வு செய்துள்ளது. இந்திய நாணயத்தில் இந்தியாவின் 15 மொழிகளில் ஒன்றான தமிழை (தமிழ் எழுத்தை) பயன்படுத்தியுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அதிகாரப்பூர்வ வட்டாரம் ஆனது முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த செயல் அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் தமிழக அரசின் பட்ஜெட் லோகோ பகிரப்பட்டு உள்ளது. தமிழகத்தின் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு தமிழை வளர்க்கும் நோக்கத்தோடு இந்த தமிழக அரசின் பட்ஜெட் லோகோ விளம்பர சின்னத்தை வியாழக்கிழமை (மார்ச் 13, 2025) இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் 2025-26 இந்திய நாணயச் சின்னமான ‘₹’ என்பதற்குப் பதிலாக ‘ரூபாய்’ (நாணயத்தின் தமிழ்ச் சொல்) என்பதைக் குறிக்க ‘ரூ’ என்ற தமிழ் எழுத்தைக் கொண்டு (TN Govt Introduced A New Budget Logo) வெள்ளிக்கிழமை (மார்ச் 14, 2025) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது (TN Govt Introduced A New Budget Logo)
சட்டப்பேரவையில் நாளை மார்ச் 14, 2025 காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் (TN Govt Introduced A New Budget Logo) செய்ய உள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசுக்கு கடந்த ஆண்டுகளில் வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை வெளியிட இருக்கிறார். அதேபோல், அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அளிக்க உள்ளார். மறுநாள் 15-ம் தேதி வேளாண்மைத் துறை அமைச்சர் வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.