Gistak Media – Cinema News | Trending News | Latest News

Tnpsc Group 4 Results : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான புதிய தகவல்

3,935 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை 12-ம் தேதி நடந்து முடிந்தது. மொத்தம் இந்த தேர்வை 11,48,019 பேர் எழுதியிருந்தனர். இதன் அடிப்படையில் பார்த்தால் 1 பதவிக்கு சுமார் 287 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும் தேர்வானது மிகக் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் ரிசல்ட் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து உள்ளனர். தற்போது குரூப் 4 ரிசல்ட் எப்போது வெளியாகும் என்ற தகவல் வெளியாகி (Tnpsc Group 4 Results) உள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. அரசு பணிக்கு காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக டிஎன்பிஎஸ்சி இருந்து வருகிறது.

குரூப் 4 தேர்வு ரிசல்ட்

டிஎன்பிஎஸ்சி ஆண்டு தோறும் கால அட்டவணையை வெளியிட்டு அதற்கேற்றவாறு தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 3 உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானாலும், தேர்வர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பாக இருப்பது குரூப் 4 பணியிடங்கள் தான். ஏனென்றால் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மேலும் கொள்குறி வகையிலான எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக வேலை என்பதால், குரூப் 4 தேர்வை பல லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதுகின்றனர்.

விடைக்குறிப்புகள் வெளியீடு

Tnpsc Group 4 Results - Gistakmedia

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட ஓராண்டுக்கு மேல் எடுத்துக்கொண்டது. இது தேர்வர்களுக்கு பெரும் மன உளைச்சலையும் அதிருப்தியையும் கொடுத்தது. ஆனால் கடந்த ஆண்டு தேர்வு முடிந்து 3 மாதங்களுக்குள் (Tnpsc Group 4 Results) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு தற்போதைய, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதங்களில் வெளியிடப்படும் என்றும், குரூப் 4 தேர்வுகளுக்கான உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டு, தற்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம் வெளியாகும் (Tnpsc Group 4 Results)

டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியது போல 3 மாதத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டால், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் சமயத்தில் தேர்வர்களுக்கு இடையூறு இல்லாத வண்ணம் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் நடத்தப்படும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top