-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
Union Budget 2023-2024: நடுத்தர வர்க்கத்தினர் நலம் காக்க வரும் நல்ல பட்ஜெட்
Union Budget 2023-2024: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த குடும்பங்கள் ஆனது அதிக பணவீக்கம், வருமான வரவு குறைதல் மற்றும் பெருமளவில் நடைபெறும் பணி நீக்கங்கள் ஆகியவற்றுடன் போராடி வருகிறார்கள். ஒரு நாட்டில் பணவீக்கம் என்பது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மீதான வரி போன்றது. குறிப்பாக ஆண்டுக்கு Rs.5,00,000 – Rs.10,00,000 வரை சம்பாதிக்கும் குடும்பங்கள், மானியங்களுக்கு கூட தகுதி பெற முடியாமல், பணவீக்கத்தின் முழுச் சுமையைச் சுமக்கும் சூழ்நிலை ஏற்பட்டு, மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
வங்கிகளின் கடனுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது, சில தொழில்துறைகளின் வளர்ச்சியை பாதித்துள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் வாகன தொழில்துறைகளை பெருமளவில் பாதித்துள்ளது. தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் வருமான வீழ்ச்சி ஆகியவை நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வளர்ச்சியை கணிசமாக குறைத்துள்ளன. மேலும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைச் செலவை அதிகரித்துள்ளது மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சியை பெருமளவில் பாதித்துள்ளது.
நடைமுறைக்கு வரும், புதுப்பிக்கப்பட்ட சலுகை வரி முறை
நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைப்பதற்காக, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட வரி சலுகை விவரங்கள்
- 3,00,000 வரையிலான வருமானத்திற்கு வரி விதிக்கப்படாது.
- 3,00,000 – Rs.6,00,000 வரையிலான வருமானம் இருந்தால் 5% வரி ஆனது விதிக்கப்படும்.
- 6,00,000 – Rs.9,00,000 வரையிலான வருமானம் இருந்தால் 10% வரி ஆனது விதிக்கப்படும்.
- 9,00,000 – Rs.12,00,000 வரையிலான வருமானம் இருந்தால் 15% வரி ஆனது விதிக்கப்படும்.
- 12,00,000 – Rs.15,00,000 வரையிலான வருமானம் இருந்தால் 20% வரி ஆனது விதிக்கப்படும்.
- 15,00,000 மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30% வரி விதிக்கப்படும்.
- இருப்பினும், ஆண்டு வருமானம் ஆனது Rs.7,00,000 வரை வரி விதிக்கப்படாது.
இந்தியாவில் 80 மில்லியனுக்கும் அதிகமான வரி செலுத்துவோர் உள்ளனர். இந்த புதுப்பிக்கப்பட்ட வரி சலுகைகள் ஆனது நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைக்கும் மற்றும் நேரடி வரி விதிப்பை எளிமையாக்கும். சில வரி நிவாரண நடவடிக்கைகள் நடுத்தர வர்க்க குடும்பங்களின் சுமையை குறைக்கும். புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு Rs.50,000 நிலையான விலக்கு பலனை நீட்டிக்க சீதாராமன் தனது சமீபத்திய பட்ஜெட்டில் முன்மொழிந்துள்ளார்.
இந்தியர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் அவர்கள் வல்லுநர்கள். அவர்கள் முன்பு போல் இப்போது இல்லை. பணம் சம்பாதித்து தனது குடும்பத்தை நடத்தும் ஒரு நபர் தனது பணத்தை எங்கு வைக்க வேண்டும் என்பதில் புத்திசாலி… அதனால் அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தூண்டுவது கூட அவசியமில்லை என்று தான் நினைப்பதாக கூறினார்.
நிலையான விலக்குக்கு அனுமதித்துள்ள விதம் மற்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதங்கள், வெவ்வேறு அடுக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் ஆகியவை உண்மையில் மக்கள் மற்றும் வரி செலுத்துவோர் குடும்பம் ஆகியோர்களின் கைகளில் அதிக பணத்தை மிச்சப்படுத்தி தரும் என்று சீதாராமன் கூறினார்.
ஜி20 நாடுகளுடன் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவது குறித்து, பொதுவான கட்டமைப்பை வடிவமைப்பதற்காக இந்தியா விவாதித்து வருவதாக கூறினார். 2023-24ல் சில்லறை பணவீக்கம் சுமார் 5.3 சதவீதமாக இருக்கும் என்றும், கச்சா விலை சீராக தொடர்ந்தால் சில்லறை பணவீக்கம் மேலும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய நிதித் தகவல் பதிவேடு (NFIR- National Financial Information Registery) கடன் அனுமதி மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குவதற்கான செயல்முறையை விரைவுபடுத்த யோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) போன்ற அரசாங்கத் திட்டங்களில் தனிநபர்கள் அதிக முதலீடு செய்ய அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். அரசாங்கத்தின் நகர்ப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆனது சமீபத்திய ஆட்குறைப்புகளால் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் குறைக்கும்.
மத்தியதர வர்க்க குடும்பங்களில் அதிக வேலை வளர்ச்சி நடுத்தர வர்க்க குடும்பங்களின் வருமானத்தை மறைமுகமாக உயர்த்தி, மிகவும் தேவையான சில நிவாரணங்களை அளிக்கும். அடிப்படை விலக்கு வரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டது மற்றும் நிலையான விலக்கு அறிமுகம் ஆகியவை எதிர்பார்க்கப்படும் மற்ற நடவடிக்கைகளாகும்.
அரசு, “பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான சலுகைகளுக்குத் Rs. 8,00,000- க்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்கள் தகுதியானவர்கள்” என அறிவித்துள்ளது. தற்போதைய விலக்கு வரம்பு ரூ. 2,50,000 என்பது அடிப்படை உண்மைகள் மற்றும் நிலவரத்துடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை என்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அடிப்படை விலக்கு வரம்பான ரூ.2,50,000- த்தை அரசாங்கம் உயர்த்தும் என்று நடுத்தர வர்க்கப் பிரிவினர் எதிர்பார்க்கிறார்கள்.
வளர்ச்சியை பெற பல ஆண்டுகளாக துடிக்கும் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் அழுத்தங்களைப் புரிந்துகொள்வதாகவும், அவர்களின் நலனுக்காக, வளர்ச்சிக்கான ஆதரவை வழங்கவும், நுகர்வைத் தூண்டவும், அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்றும் உறுதியளித்தார்.
மத்தியதர வர்க்க குடும்பங்களில் சமீபத்திய தனியார் நுகர்வு மற்றும் வீட்டு சேமிப்புகள் குறைந்து வருவதால், நடுத்தர வர்க்க குடும்பங்களின் செலவழிப்பு வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற வேலை சார்ந்த துறைகளை தீவிரமாக விரிவுபடுத்துவதன் மூலம் நடுத்தர வர்க்கத்திற்கு உதவ அரசாங்கம் எதிர்பார்க்கிறது. குறைந்த கட்டணங்கள் மற்றும் அதிக நெகிழ்வான வரி அடுக்குகளுடன் கூடிய புதிய வருமான வரி விதிப்பில் கவனம் செலுத்தப்படும்.
வீட்டுக் கடன்கள் மற்றும் சுகாதாரச் செலவுகள் தொடர்பான அதிக விலக்குகள் அளிக்கப்படும். 30 சதவீதம் முதல் 25 சதவீதம் வரையிலான அதிகபட்ச வரியை குறைப்பதன் மூலம் வேலைவாய்ப்பிலுள்ள வரி செலுத்துவோருக்கு அரசாங்கம் நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகளுடன், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்துக்கு இணையான காப்பீட்டுத் தொகையை தனிநபர் வாங்கும் போது ரூ.35,000-க்கும் அதிகமாக செலவாகும் என்பதால், மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை ரூ.25,000 என அரசாங்கம் உயர்த்தும் என திர்பார்க்கப்படுகிறது. விருப்ப வரி முறையை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற அரசாங்கம் திருத்தப்பட்ட அடுக்குகளை அறிமுகப்படுத்தும். புதிய மற்றும் பழைய வருமான வரி முறைகளை ஒன்றாக இணைக்கும் கலப்பின வரி என்ற முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






